இரணியல் அருகே கணவன் - மனைவி தற்கொலை

by Staff / 19-11-2022 12:40:10pm
இரணியல் அருகே கணவன் - மனைவி தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஆரோக்கியபுரம் குழியூரை சேர்ந்தவர் பாலையா நாடார் (85). இவரது மனைவி செல்லம் (77). இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். பாலையா நாடார் மற்றும் அவரது மனைவி இருவரும் மகன் சந்திரசேகர் வீட்டின் அருகில் உள்ள குடும்ப வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை தம்பதியர் இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது மன வேதனையில் இருந்த இருவரும் அறையில் உள்ள ஒரே ஜன்னலில் கயிற்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்த தகவல் அறிந்து வந்த இரணியன் போலீசார் தம்பதியர் இருவரின் உடலையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அவரது மகன் சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் இரணியன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயதான தம்பதியர் ஒரே அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

 

Tags :

Share via