ரயில்வே தண்டவாளத்தில் கால்கள் துண்டாகிய நிலையில் மூதாட்டி பலி

by Staff / 23-11-2022 04:04:21pm
ரயில்வே தண்டவாளத்தில் கால்கள் துண்டாகிய நிலையில் மூதாட்டி பலி

கோவை மாவட்டம் போத்தனூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை மூதாட்டி ஒருவர் கடக்க முயன்றுள்ளார். ரயில் வருவதை அறியாமல் மூதாட்டி கடக்க முயன்ற போது, ரயில் மோதியதில் மூதாட்டி இரண்டு கால்களும் துண்டாகி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருநத மக்கள், போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் ரயில்வே உதவி காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த மூதாட்டியை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் அலமேலு என்பது மட்டும் தெரியவந்தது.

இந்த நிலையில் மூதாட்டி மருத்துவமனையில் தீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனிடையே மூதாட்டி அலமேலு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் பொதுமக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via