கள்ளக்காதலனுக்க குழந்தையை பறிகொடுத்த தாய்

by Staff / 02-12-2022 04:59:45pm
கள்ளக்காதலனுக்க  குழந்தையை பறிகொடுத்த தாய்

திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவருக்கு வயது 31. இவரது மனைவி துர்காதேவி. இவருக்கு வயது 26. இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த துர்காதேவி நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி பகுதியில் உள்ள அவரது உறவினர் பாலு என்பவரின் தோட்டத்து வீட்டில் குழந்தையுடன் தங்கியுள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள கிணற்றில் துர்காதேவியின் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், துர்காதேவி தனது கள்ளக்காதலன் அஜய்யுடன் உல்லாசமாக இருக்க காட்டுப்பகுதிக்கு சென்றதும், அப்போது அஜாக்கிரதையாக கிணற்றின் அருகே இறக்கிவிடப்பட்ட குழந்தை, கிணற்றில் தவறி விழுந்து உயிர் இழந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் துர்காதேவி மற்றும் அவரது கள்ளக் காதலன் அஜய் ஆகியோரை கைது செய்தனர்.

 

Tags :

Share via