உயிரை பறித்த மாவு மில் இயந்திரம்.. நான்கு பேர் பரிதாப பலி

by Staff / 02-09-2023 03:36:02pm
உயிரை பறித்த மாவு மில் இயந்திரம்.. நான்கு பேர் பரிதாப பலி

ராஜஸ்தானின் பாட்மேரில் சனிக்கிழமை மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர். அராங் கிராமத்தில், அர்ஜூன் சிங் என்ற நபரின் மனைவி வீட்டில் மாவு அரைக்கும் மில் நடத்தி வருகிறார். இன்று மாவு மில்லில் கோதுமை அரைத்துக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி அப்பெண் உயிரிழந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற குழந்தைகளும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அர்ஜூன் சிங்கின் உறவினரும் அவர்களை காப்பாற்ற முயன்றபோது மின்சாரம் தாக்கியதில் நால்வரும் உயிரிழந்தனர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via