ஷாப்பிங் மாலில் கத்திக்குத்து - 5 பேர் பலி

by Staff / 13-04-2024 03:51:22pm
ஷாப்பிங் மாலில் கத்திக்குத்து - 5 பேர்  பலி

ஆஸ்திரேலியாவின் சிட்னி ஷாப்பிங் சென்டரில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஐந்து பேர் மற்றும் ஒரு சந்தேக நபர் கொல்லப்பட்டனர். இதில் ஒரு சிறு குழந்தை உட்பட பலர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் குற்றவாளியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தும் முன், அவர் ஷாப்பிங் மாலில் மக்களைக் கத்தியால் குத்தினார். இதில் ஒன்பது பேர் படுகாயமடைந்த நிலையில், 5 பேர் உயிரிழந்தனர். குற்றவாளி யார் என்பது அதிகாரிகளுக்கு இன்னும் தெரியவில்லை என்றும், விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

 

Tags :

Share via
Logo