நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி: மம்தா அறிவிப்பு
2024 மக்களவைத் தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடும் என்று மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பானர்ஜி, 2024 தேர்தலில் தனது கட்சி "சாதாரண மக்களின் ஆதரவுடன்" தனித்து போட்டியிடும் என்று கூறினார். "2024 தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். மக்கள் ஆதரவுடன் நாங்கள் போராடுவோம். பாஜகவை தோற்கடிக்க விரும்புபவர்கள் நிச்சயமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். சிபிஎம் அல்லது காங்கிரஸின் பேச்சைக் கேட்கக் கூடாது" என்றார்.
Tags :