காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்த உதயநிதி

by Staff / 03-03-2023 11:58:39am
காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்த உதயநிதி

நாமக்கல் மாவட்டம் அழகு நகர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை இன்று தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பள்ளி மாணவர்களுடன் உணவருந்தி, உணவு தரமாகவும் சுவையாகவும் வழங்கப்பட்டு வருகிறதா என்பதை உறுதிசெய்து, இத்திட்டத்தால் அதிகரித்துள்ள மாணவர் எண்ணிக்கை குறித்து ஆசியர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார். இதில், அதிகாரிகள், ஆசிரியர்கள் நாமக்கல் மாவட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via