காவல்துறை கண்காணிப்பாளரிடம் திமுகவினர் புகார்.

by Editor / 22-08-2023 10:25:07pm
 காவல்துறை கண்காணிப்பாளரிடம் திமுகவினர் புகார்.

தமிழக முதலமைச்சரையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை அவதூறாக பேசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக கட்சியினர் புகார்.அதிமுக மாநாட்டில் அநாகரிகமான முறையில் அவதூறாக பேசியும் பாட்டு படித்ததை கைத்தட்டி கேலி கூத்தாடித்தனம் செய்த கூவத்தூர் கோஷ்டிகளை கண்டித்தும் செய்தியை நேரடியாக ஒளிபரப்பு செய்த தனியார்  தொலைக்காட்சியின் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி மாவட்ட கண்காணிப்பாளர் சாம்சனிடம் தென்காசி தெற்கு மாவட்ட திமுகவினர் புகார் அளித்தனர்.

 

Tags : திமுகவினர் புகார்.

Share via