சூட்கேஸில் இருந்த பெண் உடல்

by Staff / 25-03-2024 03:07:22pm
சூட்கேஸில் இருந்த பெண் உடல்

சேலம் மாவட்ட ஏற்காட்டில் சூட்கேஸில் பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில்,  விசாரணையின்போது, அந்த பெண் கணவரை பிரிந்து கத்தார் நாட்டில் வேலை பார்த்து வந்த சுபலட்சுமி (33) என்பதும், இவருக்கும் கத்தாரில் வேலை பார்த்துவந்த நடராஜ் (32) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில்இருவரும் தமிழகத்திற்கு வந்து கோவையில் வீடு எடுத்து தங்கியுள்ளனர். அப்போது நடராஜின் மனைவி பெயரை மார்பில் பச்சை குத்தியது போல் தன் பெயரை கையில் பச்சை குத்த சொல்லியுள்ளார் ,சுபலட்சுமி.. இதனையடுத்து, தன் மனைவியை சந்திக்க சென்ற போது நடராஜ்  பச்சைக்குத்தியதை அழித்துள்ளார்.. இதன் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் நண்பர் உதவியுடன் கொலை செய்து சூட்கேஸில் மறைத்து வைத்து ஏற்காட்டில் வீசியதாகதெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via