நண்பனின் மனைவியை கொன்று சோபாவுக்குள் மறைத்தவரை காட்டிக் கொடுத்த செருப்பு

by Admin / 20-02-2022 04:44:50pm
நண்பனின் மனைவியை கொன்று சோபாவுக்குள் மறைத்தவரை காட்டிக் கொடுத்த செருப்பு

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் வசித்து வந்தவர் சுப்ரியா ஷிண்டே.  இவர் கடந்த 15ம் தேதி தனது வீட்டின் ஷோபாவில் இறந்த நிலையில் இருந்துள்ளார்.  

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸ் கொலை செய்த நபரை குறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

சுப்ரியா ஷிண்டே வீட்டின் வெளியே கொலையாளி விட்டு சென்ற செருப்பை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து சுப்ரியா ஷிண்டேவின் கணவரிடம் விசாரணை நடத்தியதில் அவரின் நண்பர் ஒருவர் இது போன்ற காலணி வைத்திருப்பதும் அவரது பெயர் விஷால் தாவார் என்பதும் தெரியவந்துள்ளது. அதன்பின் போலீஸ் விஷால் தவாரை பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

சுப்ரியாவின் கணவர் வேலைக்காக வெளியே சென்றிருந்த போது அவரது வீட்டிற்கு சென்றுள்ளார், அப்போது அவர் தனது நண்பனின் மனைவி என்று கூட பாராமல் சுப்ரியாவிடம் தவறாக நடந்துள்ளார். ஆனால், சுப்ரியா இதற்கு மறுத்து வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கண்டித்துள்ளார்.

இதனால்  ஆத்திரமடைந்த விஷால் தவார் அங்கிருந்த நைலான் கயிற்றினால் அவரது கழுத்தை இறுக்கியுள்ளார். இதனால் மூச்சுத்திணறி சுப்ரியா ஷிண்டே உயிரிழந்ததால் உடலை மறைக்க ஷோபாவிற்குள் மறைத்து விட்டு தப்பி சென்றுள்ளார்.

இந்தியாவில் நண்பனின் மனைவியை கொலை செய்து சோபாவிற்கு பின்னாடி மறைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via