தொழிலாளி கொலை 2 ஆண்டுகளுக்கு பின் வாலிபர் கைது
சுசீந்திரம் , மேலகிருஷ்ணன் புதூர் பகுதியை சேர்ந்ததொழிலாளி ராஜதுரை (50).. கடந்த 7- 11- 2022 அன்று கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். துப்பு துலங்காத நிலையில் வழக்கை மீண்டும் தனிப்படை போலீசார் விசாரித்தனர். கொலை நடந்த பகுதியில் நின்ற பைக் தொடர்பாக விசாரித்த போது பைக் புத்தேரி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி நாகராஜன் என்பவரிடம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் சென்றனர்.
இந் நிலையில் நாகராஜன் புத்தேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் சரணடைந்தார். கிராம அலுவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நாகராஜனை கைது செய்தனர்.
விசாரணையில், குடிபோதையில் திட்டியதால் ராஜதுரையை தாக்கியதாகவும் அதில் அவர் இறந்ததாகவும் தெரிவித்தார். கொலை வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Tags :