நள்ளிரவில் தீ பிடித்த எரிந்த வேன்

by Staff / 30-01-2023 05:00:13pm
நள்ளிரவில் தீ பிடித்த எரிந்த வேன்

மதுரை மகாலட்சுமி நகரை சேர்ந்த நிஷாந்த். என்பவர் தாயார் ஜெயாவுடன் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, ஆம்னி வேனில் புறப்பட்டு சென்றுள்ளனர்.அவர்கள் நள்ளிரவு நேரத்தில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த போது மூன்று மாவடி அய்யர் பங்களா அருகே, வேன் வந்தது.அப்போது வேனில் திடீரென கரும்புகை வந்தது. அதிர்ச்சி அடைந்த நிஷாந்த், தாய் ஜெயாவுடன் வேரிலிருந்து கீழே இறங்கி விட்டார். வேன் தீப்பற்றி எரிந்தது.இதுபற்றி நிஷாந்த் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் வேன் முற்றிலும் எரிந்து விட்டது.இது குறித்து கே. புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via