தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மூன்று பேர் உயிரிழப்பு

by Editor / 15-08-2024 04:03:31pm
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மூன்று பேர் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் உள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதியில் அமைந்துள்ள தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி, கல்லூரி மாணவி உள்பட மூன்று பேர்  உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சடலங்களை மீட்டு விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் சிவகாசியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மேனகா (18), 11ம் வகுப்பு மாணவி ஈஸ்வரி (15) மற்றும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via