தனியார் நிறுவன காவலாளி துாக்கிட்டு தற்கொலை

by Staff / 25-11-2022 03:08:22pm
தனியார் நிறுவன காவலாளி துாக்கிட்டு தற்கொலை

மறைமலை நகர் அடுத்த பேரமனுார் விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன், 50. மறைமலை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில், செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார்.இவருக்கு, திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இவர், கடந்த சில தினங்களாக, தொடர்ந்து தலைவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம், மனைவி மற்றும் மகன் வேலைக்கு சென்றவுடன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மாலையில், வேலைக்கு சென்று வீடு திரும்பிய மகன், வீட்டின் கதவை தட்டியும் திறக்காததால், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு, தேவேந்திரன் துாக்கில் தொங்கியபடி, இறந்த நிலையில் கிடந்துள்ளார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மறைமலை நகர் போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via