செல்போன்களை திருடிய நபர் கைது

by Staff / 28-11-2022 02:14:12pm
செல்போன்களை திருடிய நபர் கைது

பயணிகளிடம் செல்போன்களை திருடிய தமிழகத்தை சேர்ந்த ஒருவரை திருவனந்தபுரம் ரயில்வே போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் நாகர்கோவிலை சேர்ந்த ராஜ்குமார் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவரை கொட்டாரக்கரையில் வைத்து போலீசார் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 6 செல்போன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த நபர் ரயிலில் பல மொபைல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதையும் கண்டுபிடித்தனர்.

இரவு நேரத்தில் சார்ஜ் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த செல்போன்களை இவர் திருடுவது வழக்கம். போனை எடுத்தவுடன் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி வேறு ரயிலில் ஏறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். திருடப்பட்ட இந்த போன்கள் திருவனந்தபுரம், மதுரை, கோவில்பட்டி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo