பிரதமர் தலைமையில் இன்று ஜி 20 மாநாடு குறித்து ஆலோசனை
ஜி 20 மாநாட்டை அடுத்தாண்டு இந்தியா தலைமை ஏற்று நடத்துகிறது.கடந்த ஆண்டு ஜி 20 மாநாட்டை இந்தோனேஷியா
தலைமை தாங்கி நடத்தியது.அடுத்த ஆண்டு நடக்க உள்ள மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக ஆலோசனைக்கூட்டம் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கிறது.இதற்காக,இந்தியாவிலுள்ள அனைத்துக்கட்சித்தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஜி 20 மாநாடு நடப்பதற்கு முன்பாக 200 கூட்டங்களை இந்தியாவிலுள்ள அனைத்துமாநிலங்களிலும் நடத்த மத்திய அரசு திட்டம் ..ஒரே பூமி -ஒரே குடும்பம் -ஒரே எதிர்காலம்என்ற இலக்குடன் நடத்தப்படவுள்ள உச்சி மாநாட்டில் தமிழக முதலமைச்சர்கலந்து கொள்ள உள்ளனர்.இம்மாநாட்டை சிறப்பிக்கும் முகமாக இந்திய தொல்லியல் சின்னங்களில் ஜி 20 என்றபொறிக்கப்பட்ட எழுத்துக்கள் வண்ண விளக்குகளால் ஒளிரசெய்யப்பட்டுள்ளன.
Tags :