இபிஎஸ் குறித்து கேள்வி.. விடாமல் சிரித்த ஓபிஎஸ்

by Staff / 17-08-2024 02:40:34pm
இபிஎஸ் குறித்து கேள்வி.. விடாமல் சிரித்த ஓபிஎஸ்

மதுரை விமான நிலையத்தில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசனை விமர்சித்து பேசிய ஜெயக்குமார் நேற்று நடந்த தேநீர் விருந்தில் இருவரும் சிரித்துப் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த ஓபிஎஸ், “ஜெயக்குமார் நடத்துகின்ற நாடகத்திற்கு நான் பதில் கூற தேவையில்லை” என்றார். தொடர்ந்து, இபிஎஸ் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ஓபிஎஸ் சிரித்தபடி அங்கிருந்து சென்றார்.
 

 

Tags :

Share via