"அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்"

by Staff / 17-08-2024 02:27:58pm

அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "1972-இல் தலைவர் கலைஞர் செயல்படுத்திட முனைந்த அத்திக்கடவு- அவிநாசி திட்டம், பல்வேறு ஆட்சி மாற்றங்களால் தடைப்பட்டிருந்தது. ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் இந்தத் திட்டத்தை இன்று ஆகஸ்ட் 17 தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்!" என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via