தொடர் போராட்டத்திற்குபின் 4 வது நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நெல்லை முன்னீர்பள்ளம் அடுத்த அடைமிதிப்பான் குளம் கல்குவாரி பாறை நிலச்சரிவில் சிக்கிய ஆறு பேரில் கிட்டாச்சி ஆபரேட்டர்கள் முருகன், விஜய் செல்வம் என நேற்று வரை மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
குவாரியில் சிக்கியிருக்கும் லாரி ஓட்டுனர்கள் செல்வகுமார், ராஜேந்திரன் மற்றும்
லாரி கிளீனர் முருகன் 3 பேரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை தீவிரமாக முயன்று வந்தனர். இந்தநிலையில் தொடர் போராட்டத்திற்கு பின் நான்காவது நபர் முருகன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். இவர் நாங்குநேரி அருகே உள்ள ஆயர்குளம் கிராமத்தைச் சேர்ந்த லாரி கிளீனர்ஆவார்.
Tags : The body of a 4th person has been recovered after a series of struggles.