இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 4  பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 4  கைது. 

by Editor / 12-10-2023 08:08:26am
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 4  பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 4  கைது. 

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  கடந்த ஆகஸ்ட் மாதம்  வலசை பகுதியில் தேவகோட்டையைச் சேர்ந்த வினோதினியை என்ற இளம் பெண்ணிடம் இன்ஸ்டா கிராமில் பழகி அழைத்து வந்து சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து கொடூரமான முறையில் கூட்டாக கற்பழித்து கொலை செய்து சாக்கு முட்டையில் கட்டி கிணற்றில் வீசிய  வழக்கு மற்றும் தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த கடையநல்லூர் அருகே உள்ள வலசை கிராமம் வடக்கு காலனி தெருவை சேர்ந்த வேல்முருகன் மகன் மனோ ரஞ்சித் வயது 20 அதே ஊரைச் சேர்ந்த முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்தையா மகன் மகா பிரபு வயது 18 மற்றும் வடக்கு காலனி தெருவை சேர்ந்த லிங்கம் மகன் பரத் வயது 19 மற்றும் கடையநல்லூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் வயது 18  ஆகிய  நபர்கள் மீதும் பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா   நான்கு நபர்களையும்  குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட    காவல் கண்காணிப்பாளர் சாம்சன்னுக்கு  பரிந்துரை செய்தார் அதன்படி தென்காசி மாவட்ட கலெக்டர்  துரை ரவிச்சந்திரன்  உத்தரவின் பேரில்,மேற்படி   நான்கு நபர்களையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்  இதற்கான தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை   பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருக்கும் மனோரஞ்சித், பரத்,  மகா பிரபு , மணிகண்டன் ஆகியோரிடம் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா  சமர்பித்தார்.

 

Tags : இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 4  பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 4  கைது. 

Share via