செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் அன்று குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை திட்டம் தொடக்கம்

by Admin / 20-03-2023 12:10:05pm
செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் அன்று குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை திட்டம் தொடக்கம்

இன்று தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.காலை பத்து மணிக்கு தன்னுடைய நிதி அறிக்கை வாசிக்க ஆரம்பித்து மொத்த வரவு செலவுகளையும் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்ட நிலையில் ,எதிர்க்கட்சிகளின் தொடர்விமர்சனங்களுக்குரியதாக இருந்த தி.மு.க அரசின்முக்கிய தேர்தல் அறிவிப்புகளில் முதன்மையாக இருந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும்அறிவிப்பு வருமா எனக்காத்திருந்தவர்களுக்கு நிதியமைச்சர் நிதிஅறிக்கையின் முத்தாய்ப்பாக வரும் செப்டம்பர் 15   அண்ணா பிறந்த நாள் அன்று குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை திட்டம் தொடக்கம் என்றுஅறிவித்தார்.

 

Tags :

Share via