மதுரையில் கார் ஒர்க்ஷாபில் தீ விபத்து
மதுரைஅண்ணாநகர் ஆவின் அலுவலகம் அருகே கார் ஒர்க்ஷாப் ஒன்று உள்ளது.அதில் கார் ஒன்றை ஊழியர்கள் இன்று பழுது பார்த்துக்கொண்டிருந்தனர்.அந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சியில் ஈடுபட்டனர்.மேலும் இந்த தீ விபத்து குறித்து தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலுமாக எரிந்து விட்டது.இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags :