தாயை கவனிக்காத மகன்-குப்பைகளுக்குள் வாழ்ந்த மூதாட்டி

by Editor / 14-12-2022 08:00:44am
தாயை கவனிக்காத மகன்-குப்பைகளுக்குள் வாழ்ந்த மூதாட்டி

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை  அருகே பாழடைந்த வீட்டில் இருட்டில் குப்பை கூழங்களுக்கு இடையே ஆதரவின்றி உயிருக்கு போராடியபடி கிடந்த 80-வயது மூதாட்டி கித்தேரி அம்மாளை பொதுமக்கள் மீட்ட நிலையில் தாயை கவனிக்காத அவரது மகன் செல்வராஜ் இடம் இரணியல் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.மீட்கப்பட்ட மூதாட்டி முதலுதவிக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபட்டிருக்கிறார்.இந்த சம்பவம் அந்தப்பாகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via