மலேசியாவில் கடுமையான நிலச்சரிவு
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டது. சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள முகாமில் அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். விபத்தின் போது முகாமில் மொத்தம் 79 பேர் இருந்தனர், அவர்களில் 23 பேர் உயிர் தப்பினர். முகாமின் பின்பகுதியில் இருந்த மலை 100 அடி உயரத்தில் இருந்து சரிந்து விழுந்ததாக பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் நரோஜம் காமிஸ் தெரிவித்தார்.
Tags :