தமிழ்நாட்டில்கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாடு

by Admin / 11-01-2022 01:03:09am
தமிழ்நாட்டில்கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாடு

 

தமிழ்நாட்டில்,கொரோனாநோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து மருத்துவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில்,தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில்10.01.2022 அன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியன்,தமிழ்நாட்டின் தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு,உலகசுகாதார நிறுவனத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளர் மருத்துவர்.செளமியா சுவாமிநாதன் மற்றும் உயர்அதிகாரிகள் கலந்து கொண்டனர். மருத்துவ வல்லுனர்கள்தெரிவித்த கருத்தின் அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு பின்வரும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன்

31-01-2022 வரை நடை முறைப்படுத்தப்படும் 

 14-01-2022 முதல்18-01-2022வரை அனைத்துவழிபாட்டுத்தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.
 

16-01-2022   ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு  பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொதுபேருந்துகளில அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

 

Tags :

Share via