பெண் சுட்டுக் கொலை
தேசிய தலைநகர் டெல்லி குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் இடமாக மாறி வருகிறது. அமன் விஹார் பகுதியில் 55 வயது கீதா என்ற பெண் வியாழக்கிழமை இரவு மூன்று ஆசாமிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒருவர் வீட்டின் முன் நிற்க, மற்றொருவர் சாலையில் காவலுக்கு நிற்கிறார்.வீட்டின் கதவை திறந்த பெண் மீது வாசலில் நின்றிருந்த நபர் துப்பாக்கியால் சுட்டார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. உயிரிழந்தவரின் மகன் ஒரு வருடத்திற்கு முன்னர் இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், இதனை விரும்பாத பெண்ணின் உறவினர்களே இந்த அட்டூழியத்தை செய்துள்ளதாகவும் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
Tags :