நெல்லை சரகத்தில் 10 ஆய்வாளர்கள் இடமாற்றம்.

by Editor / 26-05-2023 11:25:22pm
நெல்லை சரகத்தில் 10 ஆய்வாளர்கள் இடமாற்றம்.

திருநெல்வேலி சரகத்தில் காவல்துறை ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோகிலா கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராகவும், ராஜகுமாரி குற்றாலம் காவல் நிலைய ஆய்வாளராகவும், பெருமாள் மனவளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளராகவும், காந்திமதி பணபடலிசத்திரம் காவல் நிலைய ஆய்வாளராகவும், கோமதி அனைத்து மகளிர் காவல் நிலையம் மார்த்தாண்டத்திற்கு ஆய்வாளராகவும், வனிதா அனைத்து மகளிர் காவல் நிலையம் அம்பாசமுத்திஆய்வாளராகவும், பாமா பத்மினி சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையஆய்வாளராகவும்,சாந்தி சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையஆய்வாளராகவும்,தாமஸ்  கொல்லங்கோடு காவல் நிலைய ஆய்வாளராகவும், மாரியம்மாள் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராகவும், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நெல்லை சரக  டிஐஜி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via