அடுத்த இரண்டு ஆண்டுகளில் 8,000 இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

by Editor / 16-07-2022 02:02:12pm
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 8,000 இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

நாடு முழுவதும் அடுத்த 2 ஆண்டுகளில் 8,000 இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்தார். கெயில் இந்தியா லிமிடெட் மற்றும் அதன் குழுமத்தின் 9 நகர எரிவாயு விநியோக நிறுவனங்களால் 14 மாநிலங்களில் 166 இயற்கை எரிவாயு நிலையம் அமைக்க பட்டுள்ளது  விழாவில் கலந்துகொண்டு காணொளி மூலம் பேசிய ஹர்தீப் சிங் புரி கடந்த 2014ஆம் ஆண்டில் 900 இயற்கை எரிவாயு நிலையங்கள் இருந்தன என்றும் தற்போது 4500 இயற்கை எரிவாயு நிலையங்கள் இருப்பதாகவும் கூறினார்.

 

Tags :

Share via