ஞாயிற்றுக்கிழமை சந்தை - வளர்ப்பு பிராணிகளை வாங்க குவிந்த பொதுமக்கள் - வெளிநாட்டு பறவைகள் முதல் நாட்டுகோழிகள் வரை விற்பனை அமோகம்

by Staff / 18-12-2022 04:43:21pm
ஞாயிற்றுக்கிழமை சந்தை - வளர்ப்பு பிராணிகளை வாங்க குவிந்த பொதுமக்கள் - வெளிநாட்டு பறவைகள் முதல் நாட்டுகோழிகள் வரை விற்பனை அமோகம்

மதுரை மாநகரில் சிம்மக்கல் வைகையாற்றின் வடகரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சந்தை வாரந்தோறும் செயல்படும். இங்கு வளர்ப்பு பிராணிகள், பறவைகள், குருவிகள், கோழி, சேவல், காடை,வாத்து புறாக்கள், முயல் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படும். மதுரை தேனி திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் வியாபாரிகள் ஏராளமானோர் ஓரே இடத்தில் கூடுவதால் ஏராளமான பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சந்தைக்கு வருகை தந்துள்ளனர்..  

 இன்று காலை தொடங்கிய ஞாயிற்றுக்கிழமை சந்தையில் ஏராள இளைஞர்கள், சிறுவர்கள் பொதுமக்கள் குவிந்தனர்.

தங்களுக்கு தேவையான வளர்ப்பு பிராணிகள், லவ் பேர்ட்ஸ்,்ழ வெளிநாட்டு பறவைகள் , கோழி, வாத்து,புறாக்களை வாங்கிசென்றனர்.

 

Tags :

Share via