லெபனான் முழுவதும் வாக்கி டாக்கிகள் வெடித்து ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்

by Admin / 19-09-2024 12:24:04am
 லெபனான் முழுவதும் வாக்கி டாக்கிகள் வெடித்து ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்

லெபனானில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெய்ரூட்டின் தாஹியே ,ஹிஸ்புல்லாவின் பெக்கா பள்ளத்தாக்கில் நேற்று  நூற்றுக்கணக்கான பேஜர், வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர்.. 2800க்கும்க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று லெபனான் முழுவதும் வாக்கி டாக்கிகள் வெடித்து ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் 300க்கும் மேற்பட்டோர்காயம் அடைந்துள்ளனர்.இன்று தெற்கு சிடோனில் ஒரு செல்போன் கடையில் இருந்து புகை வெளியேறியதாகவும் அது குறித்த புகைப்படங்களும் வெளிவந்த நிலையில், பல்வேறு இடங்களில் ரேடியோ உள்ளிட்ட எலக்ட்ரானிக் சிறிய சாதனங்களும் வெடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் செஸ் போல போன்ற இடங்களில் பேஜர்கள் பயன்பாட்டில் இருப்பதால் இஸ்ரேல் உளவு அமைப்பு இது போன்ற தாக்குதலில் ஈடுபட்டு இருக்கலாம் என்னும் கருத்து நிலவுகிறது.. இருப்பினும், இஸ்ரேல் உளவு அமைப்பு இது குறித்து இதுவரை பொறுப்பேற்கவில்லை.

 லெபனான் முழுவதும் வாக்கி டாக்கிகள் வெடித்து ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்
 

Tags :

Share via