தமிழ்நாட்டில் மே. 25-ம் தேதிக்கு முன்னரே பருவமழைக்கு வாய்ப்பு.

சென்னையில் இன்று அதிகாலை முதல் லேசானது தொடங்கி மிதமானது வரையிலான மழை நகரின் பல்வேறு இடங்களில் பதிவாகி உள்ளது. வடபழனி, கோடம்பாக்கம், சூளைமேடு, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் இந்த மழை பதிவானது. இதனிடையே சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆர்வலர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இம்மாதம் 25-ம் தேதிக்கு முன்னரே பருவமழை தொடங்க வாய்ப்பு என்றும் தெரிவித்தார்.
Tags : தமிழ்நாட்டில் மே. 25-ம் தேதிக்கு முன்னரே பருவமழைக்கு வாய்ப்பு