54 வயதில் திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட திருமண ராணி கைது.

by Editor / 03-07-2022 07:59:48pm
  54 வயதில்  திருமணம் செய்து  மோசடியில் ஈடுபட்ட  திருமண ராணி கைது.

சென்னை முத்தாபுதுப்பேட்டையை சேர்ந்த கணேஷ் என்பவர் தனது இரண்டாம் திருமணத்திற்கு தரகர் மூலம் பெண் தேடிக்கொண்டிருந்தார். பின்னர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சரண்யா என்பவரை வரதட்சணையாக 25 சவரன் தங்கநகை கொடுத்து கணேஷ் 2வதாக திருமணம் செய்து கொண்டார். திடீரென்று சரண்யா சம்பள பணம், பீரோ சாவி என ஒவ்வொன்றையும் கணேஷின் சண்டையிட்டு கைப்பற்றியயுள்ளார்.ஒருகட்டத்தில் அவருடைய சொத்துக்களை தனது பெயரில் எழுதி தர வேண்டுமென்று அடம்பிடித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த கணேஷ், சொத்துகளை எழுதி வைக்க சம்மதித்து சரண்யாவிடம் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை வாங்கியுள்ளார். அப்போது சரண்யாவின் ஆதாரில் கணவர் பெயர் ரவி என இடப்பெற்றிருந்தது. இதனால் சந்தேகமடைந்த கணேஷ் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் போலீசாரின் விசாரணையில்  பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

அதன்படி சரண்யாவின் உண்மையான பெயர் சுகுணா என்றும், இவர் ரவி என்பவரை திருமணம் செய்து, 2 பெண் பிள்ளைகள் உள்ளதாகவும், மகள்களுக்கும் திருமணம் ஆகி குழந்தைகளும் உள்ளதாகவும் தெரிய வந்தது. 54 வயதாகும் இவர், ரவியுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் பிரிந்து தாயுடன் வசித்து வந்துள்ளார். பின்னர் சில திருமண புரோக்கர்கள் உதவியுடன் ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது தான் கணேஷ் பெண் பார்க்க வரும்போது தன்னை இளமையாக காட்ட அலங்காரம் செய்து 35 வயதுடைய பெண்ணாக அவர்கள் முன் தோன்றியுள்ளார். அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து, திருமணமும் நடைபெற்றது. முன்னதாக ஜோலார்பேட்டையை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரை திருமணம் செய்து 11 ஆண்டுகள் வாழ்ந்து விட்டு பின்னர் அவரை ஏமாற்றியதும் தெரியவந்தது. பின்னர் சுகுணாவை போலீசார் கைது செய்தனர்.

 

Tags : 54-year-old matrimonial queen arrested for second marriage and fraud.

Share via