நாங்குநேரி சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்ட அரசு பஸ்
நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று முதல் பொது போக்குவரத்து தொடங்கியது. இந்நிலையில் நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி புறப் பட்ட அரசு பேருந்தில் அரசின் விதிகளுக்கு உட்பட்டு 50 சதவீத பயணிகள் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.
அந்த பேருந்து நாங்குநேரி டோல்கேட் அருகே சென்ற போது நுழைவு கட்டணம் செலுத்த (பாஸ்ட்டேக்) பணம் இல்லாததால் பேருந்து தடுத்து நிறுத்தப்பட்டது இதையடுத்து அதில் பயணம் செய்த பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டு நீண்ட நேரத்திற்கு பின்னர் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
Tags :