மின்சாரம் தாக்கி ஆண் யானை சம்பவ பலி.

by Editor / 26-12-2022 09:20:55am
மின்சாரம் தாக்கி ஆண் யானை சம்பவ பலி.

நெல்லை,தென்காசி ஆகிய இரண்டு மாவட்ட  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. மேலும் இருமாவட்டங்களும் தமிழக கேரளா மாநில எல்லை பகுதியாக இந்த மாவட்டங்கள் அமைந்துள்ளதால் கேரள மாநிலத்தில் உள்ள யானைகள் அனைத்தும் தற்பொழுது சபரிமலை சீசன் காலம் என்பதால் அங்கு வசிக்கும் யானைகள் அனைத்தும் வேட்டு வெடித்து தமிழக வனப்பகுதிக்குள் கேரள வனத்துறையினரால் விரட்டிவிடப்படுகின்றன மேலும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் யானைகளின் தொந்தரவு ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து அங்கு பட்டாசுகள் படிப்பதால் யானைகள் கேரள வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தென்காசி திருநெல்வேலி மாவட்ட வனப்பகுதிகளில் ஏராளமான யானைகள் இடம் பெயர்ந்து உள்ளன. இந்த நிலையில் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் ஏராளமான யானைகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களில் புகுந்து தென்னை வாழை  உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தியும்  வருகின்றன. இந்த நிலையில் இன்று கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பான்குளத்தில் தனியார்க்கு சொந்தமான நிலப்பகுதியில் நுழைந்த காட்டு யானை ஒன்று உணவுக்காக பனைமரத்தை  பிடித்து இழுத்து உள்ளது. அப்பொழுது ஏற்கனவே அந்த பனை மரத்தில் மின்சாரம் செலுத்தப்பட்டுள்ளதால் மின்சாரம் தாக்கி ஆண் யானை சம்பவ இடத்திலேயே பலியானது, இது குறித்து வனத்துறையினர் யானையின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனை செய்வதற்காக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து தென்காசி,திருநெல்வேலி மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி யானைகளும் யானை குட்டிகளும் இறப்பது தொடர்கதை ஆகி வருகிறது யானை இனங்களை காப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.


 

 

Tags :

Share via