குழந்தைகளை ஆற்றில் வீசி கொன்ற தாய்
மகாராஷ்டிர மாநிலம் உத்கிரைச் சேர்ந்தவர் மோகன். சக்ரா நகர் தண்டாவைச் சேர்ந்தவர் அருணா. இந்த தம்பதிக்கு திருமணமாகி ஒரு மகனும், அர்னெல்லா என்ற மகளும் உள்ளனர். கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் அருணா கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில், கணவர் வற்புறுத்தியதையடுத்து, பிறந்த இடத்தை விட்டு கணவர் வீட்டுக்கு வந்த அருணா, செல்லும் வழியில் இரண்டு குழந்தைகளையும் ஆற்றில் தூக்கி வீசியுள்ளார். ஆற்றில் குழந்தைகள் கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால், அவர்கள் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் அருணாவிடம் விசாரணை மேற்கொண்ட போது, ஆட்டோவில் வரும்போது டிரைவர் தன்னை பலாத்காரம் செய்ய முயன்று குழந்தைகளை ஆற்றில் வீசிவிட்டு ஓடிவிட்டதாக அருணா கூறியுள்ளார். ஆனால் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அப்பகுதியில் ஆட்டோ ஏதும் வராததால் சந்தேகம் அடைந்து அருணா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அவரே கணவர் மீதுள்ள கோபத்தில் குழந்தைகளை ஆற்றில் வீசி கொன்றது தெரியவந்துள்ளது.
Tags :



















