கணவனின் சடலத்தை எரிக்க விடாமல் மனைவி கதறல்

by Staff / 30-04-2023 04:58:28pm
கணவனின் சடலத்தை எரிக்க விடாமல் மனைவி கதறல்

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் புதன்கிழமை நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 10 வீரர்கள் மற்றும் ஒரு ஓட்டுனர் உயிரிழந்தனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்குகளை அதிகாரிகள் செய்தனர். இந்நிலையில், உயிரிழந்த வீரர் லக்முவின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி ரேஷ்மா கதறி அழுதார். மேலும், உடலை எரியூட்டும் இடத்தில் படுத்துக்கொண்டு, கதறி அழுதார். இந்த காட்சி அங்கிருந்த பலரையும் கண்ணீரை வரவழைத்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via