கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.

by Editor / 20-06-2024 03:55:11pm
கள்ளச்சாராயம் குடித்து பலியானோர்  எண்ணிக்கை 40ஆக உயர்வு.

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை39 ஆக இருந்தநிலையில்  கள்ளக்குறிச்சியில் 26 பேரும், சேலத்தில் 9 பேரும், புதுச்சேரியில் 3 பேரும், விழுப்புரத்தில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் 88 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது. ஷேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தற்போது உயிரிழந்துள்ளார். தொடர்ந்து பலரும் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். இதற்கிடையே, கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்குச் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார்.

 

Tags : கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.

Share via