கள்ளச்சாராய சாவுகளுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்” - சவுக்கு சங்கர்

by Editor / 20-06-2024 04:45:34pm
 கள்ளச்சாராய சாவுகளுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்” - சவுக்கு சங்கர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜரான பின் மீண்டும் சிறைக்கு சவுக்கு சங்கரை போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது, “தமிழக அரசு பொய் வழக்கு போடுவதில் செலுத்தும் கவனத்தை கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் மேற்கொள்வில்லை. அதன் விளைவுதான் இன்று இத்தனை உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த மரணங்கள், அரசின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது. கள்ளச்சாராய சாவுகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.

 

Tags : சவுக்கு சங்கர்

Share via