பொங்கல் பரிசு குப்பை வண்டியில்

by Staff / 29-12-2022 04:24:15pm
பொங்கல் பரிசு குப்பை வண்டியில்

தமிழகத்தில் பொங்கல் திருவிழா அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 1000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்படவுள்ள வேட்டி, சேலைகள் அந்ததந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நியாய விலைக் கடைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.இதில் திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைக்கு வட்டாட்சியர் செல்வம் தலைமையில்
வேட்டி, சேலைகள் அனுப்பட்டது. இதில் ஒரு சில நியாய விலைக் கடைக்களுக்கு மட்டும் வேட்டி, சேலை குப்பை அள்ளும் டிராக்டர் வண்டியில் அனுப்பட்டது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து வட்டாட்சியர் செல்வம் கூறுகையில், வண்டியில் சென்றது பொங்கல் பரிசு கிடையாது வேட்டி, சேலை என தெரிவித்தார். வேட்டி, சேலை குப்பை வண்டியில் கொண்டு செல்லலாமா என்ற கேள்விக்கு அனுப்பட்ட வாகனம் குப்பை வண்டியா என்பது குறித்து தனக்கு தெரியாது, விசாரிப்பதாக தெரிவித்தார்.

 

Tags :

Share via