சாத்தான்குளம் அருகே ஒரு ஆடு 5 குட்டிகள்

by Staff / 03-01-2023 04:55:11pm
சாத்தான்குளம் அருகே ஒரு ஆடு 5 குட்டிகள்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கரிசல் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். தொழிலாளியான இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் வளர்க்கும் ஆடுகள் இரண்டு அல்லது மூன்று குட்டிகளை ஈன்று வந்தது. இந்நிலையில் நேற்றுஅவர் வளர்த்த ஒரு ஆடு 5 குட்டிகளை ஈன்றுள்ளது. இதில் அனைத்து குட்டிகளும் ஆரோக்கியமாக உள்ளது. இதனை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

 

Tags :

Share via