4.50 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்; 2 பேர் கைது

by Staff / 04-01-2023 12:22:53pm
4.50 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்; 2 பேர் கைது

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், கள்ள நோட்டுகளை கொண்டு வந்த இருவரை மடக்கிப்பிடித்தனர். போலீசாரை கண்டதும் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த இருவரும் தப்பியோடினர். அப்போது பி.சி.ரோட்டை சேர்ந்த ராஜீம் என்கிற நஜ்முதீன் என்ற நிஜாம் (32), ஜெப்புவை சேர்ந்த ரபி (31) ஆகியோர்கைது செய்யப்பட்டனர். பெங்களூருவை சேர்ந்த டேனியல் என்பவரிடம் இருந்து கள்ள நோட்டுகள் வாங்கியதாக இருவரும் விசாரணையில் தெரிவித்தனர்.

ஏற்கனவே மற்றொரு வழக்கில் டேனியலை போலீசார் கைது செய்தனர். கள்ள நோட்டுகள் கோவையில் அச்சடிக்கப்பட்டதும், கடனை அடைக்க இவ்வாறு செய்ததாக கூறினர். இருவரும் டேனியலை அணுகி பணம் பெற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் அனுப்பப்பட்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo