திருப்பரங்குன்றத்தில் ரோப்கார் எம்எல்ஏ வலியுறுத்தல்

by Staff / 07-03-2023 12:51:08pm
திருப்பரங்குன்றத்தில் ரோப்கார் எம்எல்ஏ வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம் மலையில் ரோப்கார் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராஜன் செல்லப்பா எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார். மதுரை புறநகர் அதிமுக நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, திருப்பரங்குன்றம் மலையில் ரோப்கார் அமைக்க மனு கொடுக்கப்பட்டது. அதற்கு மதிப்பீடு தயார் செய்து மூன்று மாதமாக கிடப்பில் உள்ளது. தென்பழஞ்சி சாக்கிலிபட்டி வேடர்புளியங்குளம் உள்பட 10 கிராம விவசாயிகள் பயன்பெறும் திருமங்கலம் கால்வாய் பிரிவிலிருந்து பாசன வசதிக்காக வைகை தண்ணீர் கொண்டு வருவதற்கு கால்வாய் அமைக்க மனு கொடுக்கப்பட்டது. இதில் எதுவும் செயல்படுத்தவில்லை. திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

Tags :

Share via