இந்தியா அபார வெற்றி

by Admin / 08-01-2023 12:46:13am
இந்தியா அபார வெற்றி

இந்தியா- இலங்கை இடையே ஆன டி20கிரிகெட் போட்டியின் மூன்றாம் ஆட்டம் நேற்று இரவு 7.00 மணிக்கு ராஜ்கோட்டில் உள்ள கிரிகெட் மைதானத்தில் நடந்தது.டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய களத்தில்இறங்கியது.இருபது ஒவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 228 ரன் எடுத்து ஆட்டத்தை இந்தியாமுடித்து்கொண்டது.சூரியகுமார் யாதவ் 51 பந்தில் 112 ரன்கள் எடுத்து இந்திய அணியை வலுவானநிலைக்கு இட்டுச்சென்றார். அடுத்து ஆடவந்த இலங்கை அணி 16.4 ஒவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  137 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தியாவிடம் 91 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 3-2 என்கிற கணக்கில் இந்திய அணி வெற்றி வாகைசூடியது.

 

Tags :

Share via