"தமிழ்நாட்டின் தலைநகரத்தை கொலை நகரமாக மாற்றியுள்ள திமுக அரசு" ஓ.பன்னீர்செல்வம்

by Staff / 06-07-2024 04:12:01pm

தமிழ்நாட்டின் தலைநகரத்தை கொலை நகரமாக மாற்றியுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் திமுக அரசிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கும், அவரது கட்சியினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். காவல் துறையினரைக் கண்டு ரவுடிகள் அஞ்சி ஓடிய காலம் மாறி, ரவுடிகள் ராஜ்யமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சி என்பது சமூகவிரோதிகளின் ஆட்சி என்று சொன்னால் அது மிகையாகாது" என கடுமையாக சாடியுள்ளார்.

 

Tags :

Share via