ராகுலின் யாத்திரை மீண்டும் தொடக்கம்

by Staff / 28-01-2023 11:30:40am
ராகுலின் யாத்திரை மீண்டும் தொடக்கம்

ராகுல்காந்தி நடத்தும் இந்திய ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் இன்று மீண்டும் தொடங்குகிறது. காலை 9 மணிக்கு அனந்த்நாக்கில் இருந்து பயணம் மீண்டும் தொடங்கும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. காஷ்மீருக்குள் நுழையும்போது பாதுகாப்பு மீறல் நடந்ததாகக் கூறி, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் யாத்திரையை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. ஆனால் ஜம்மு காஷ்மீர் காவல்துறை பாதுகாப்பில் எந்தக் குறையும் இல்லை என்று கூறுகிறது. 15 கம்பெனி சிஆர்பிஎப் மற்றும் 10 கம்பெனி ஜம்மு காஷ்மீர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 

 

Tags :

Share via