12 வயது சிறுவனுக்கு மாரடைப்பு
கர்நாடகாவில் மடிக்கேரி மாவட்டத்தில் 12 வயது சிறுவனுக்கு மாரடைப்பு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 6ம் வகுப்பு படித்து வந்த மாணவன், சக மாணவர்களுடன் விளையாடும்போது நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளான். இதையடுத்து அவனை மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்ற நிலையில், அவன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிறுவனுக்கு வேறு எந்த நோயும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags :