கிணறு தோண்டும் பணிக்கு இடையே நான்கு பேர் பலி

by Staff / 24-05-2024 12:38:21pm
கிணறு தோண்டும் பணிக்கு இடையே நான்கு பேர் பலி

ஜார்கண்ட் மாநிலம் லோஹர்டகா மாவட்டத்தின் சென்ஹா காவல் எல்லைக்கு உட்பட்ட சித்ரி அம்படோலி கிராமத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் நேற்று (மே 23) கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மேலே இருந்த மண் அவர்கள் மீது சரிந்தது. இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட நான்கு தொழிலாளர்கள் உயிருடன் மண்ணில் புதைந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories