ஒரு கோடி ரூபாய் செல்லாத நோட்டுக்கள் பறிமுதல்

by Staff / 24-05-2024 12:42:13pm
ஒரு கோடி ரூபாய் செல்லாத நோட்டுக்கள் பறிமுதல்

சேலம் மாவட்டத்தில் ராமலிங்கம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று பல்வேறு வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சபீர் என்பவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது, பணமதிப்பு இழப்பின்போது செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. ஒரு கோடி ரூபாய் செல்லாத நோட்டுகளை கைப்பற்றிய போலீசார் சபீரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தொழிலதிபர் ஒருவர் பணத்தை கொடுத்து மாற்றிக் கொடுக்குமாறு கேட்டதாக அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via