அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 146 பேர்

by Staff / 02-12-2022 02:31:33pm
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 146 பேர்

கத்தார் ஏர்வேஸ் விமானம் சென்னையிலிருந்து, 139 பயணிகளுடன் இன்று காலை தோகா புறப்பட்டது. அப்போது திடீரென இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டது. விமானி தகுந்த நேரத்தில் எடுத்த துரித நடவடிக்கையால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 7 விமான ஊழியர்கள் உட்பட 146 பேர் உயிர் தப்பினர். விமானத்தைப் பழுது பார்க்கும் பணி இன்று காலை 11 மணி வரை நடந்தது. ஆனால், விமானத்தில் ஏற்பட்ட பழுது நீங்காததால் நாளை அதிகாலை விமானம் புறப்பட்டுச் செல்லும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via