போரிஸ் ஜான்சன் இம்மாத இறுதியில் இந்தியா வருகை

by Staff / 06-04-2022 12:40:29pm
 போரிஸ் ஜான்சன் இம்மாத இறுதியில் இந்தியா வருகை

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இம்மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா- இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வரும் 22 ஆம் தேதி இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் கடந்த ஆண்டு இரண்டு முறை இந்தியா வருவதற்காக திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அவரால் வர முடியவில்லை. தற்போது தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பிரிட்ட பிரதமரின் இந்திய பயணம் உறுதியாகியுள்ளது.

கடந்த வாரம் இரு நாட்டு பிரதமர்களிடையே ஓர் தனிப்பட்ட சந்திப்பு குறித்து தொலைபேசியில் விவாதிக்கப்பட்டது. அப்போது இரு நாட்டு உறவை மேம்படுத்துவது இருவரும் ஒப்புக்கொண்டனர்.

கடந்த ஆண்டு நவம்பரில் கிளாஸ்கோவில் நடந்த காலநிலை உச்சிமாநாட்டின் போது இரு தலைவர்களும் கடைசியாக நேரில் சந்தித்தனர். வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் இரு நாட்டு வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதில் இரு நாட்டு தலைவர்களும் உறுதியுடன் உள்ளனர்.

 

Tags :

Share via